Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கதிகலங்கிய பாகிஸ்தான்...அதிரடி காட்டிய இந்தியா...ஒரு பார்வை..

கதிகலங்கிய பாகிஸ்தான்...அதிரடி காட்டிய இந்தியா...ஒரு  பார்வை..
, செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (13:03 IST)
காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வியாழக்கிழமை நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவும் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவிட தயாராக உள்ளதாக தெரிவித்தது. இந்தியாவும் அடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை பாகிஸ்தான் மீது நடத்த ஆயத்தமானது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது... ’இந்தியா தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுக்க தயார் என்று தெரிவித்தார். 
இது இந்தியா - பாகிஸ்தான் உறவை பெரிதும் பாதித்தது. இதில் முக்கியமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கிறது என்று பரவலான கருத்து எழுந்தது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் சதி குறித்த கூடுதல் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (NIA)அறிவித்திருந்தது. 
 
இந்நிலையில் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் நாட்டில் உள்ள எல்லைப்பகுதிகளுக்குள் சென்று தீவிரவாத முகாம்கள் (காஷ்மீர் ஆக்கிரமிப்பு )மீது இன்று அதிகாலை 3:30 மணிக்கு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது.
 
இதில் முக்கியமாக ஜெய்ஸ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானங்ஜ குண்டு வீசியது. இதில் இவ்வமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகிறது. 
webdunia
இந்த தாக்குதல் விவகாரத்தில் லேசர் உதவியுடன் தான் சரியான இலக்குகளை குறிவைத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது . இது தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுத்த முயற்சிகளுக்கு தக்க பலன் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இன்று நடைபெற்ற 21  நிமிட தாக்குதலில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் முகாமிட்டிருந்த அத்துனை தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும்  தெரிகிறது.

இது தீவிரவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த துல்லியமான தாக்குதல்  இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றிச் சாதனையாகும்.
 

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

21 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட ம.நீ,ம.தயார் - கமல்ஹாசன் அதிரடி