Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானுக்குள் புகுந்து அட்டாக்: இந்திய விமானப்படையின் சாகசம்!

பாகிஸ்தானுக்குள் புகுந்து அட்டாக்: இந்திய விமானப்படையின் சாகசம்!
, செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (09:00 IST)
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களில் இந்திய விமானப்படையை சேர்ந்த 2000 வீரர்கள் அதிரடியாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் சுமார் 1000 கிலோ வெடிகுண்டுகளை பயன்படுத்தியதாகவும், இந்த தாக்குதலில் எல்லையில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் ஒரு ஆரம்பமே என்றும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் தீவிரவாத முகாம்களை அழிக்கும் தாக்குதல் தொடரும் என்றும் கூறப்படுகிறது
 
webdunia
இந்திய விமானப்படைகள் பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இருப்பினும் இந்த தாக்குதல் குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல், சீமான், தினகரன் வரிசையில் கிருஷ்ணசாமி ! – தனித்துப் போட்டியிட முடிவு