Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெங்களூரு ஐபோன் தொழிற்சாலையை வாங்கும் டாடா.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

tata
, புதன், 11 ஜனவரி 2023 (13:10 IST)
பெங்களூர் அருகே ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வரும் நிலையில் அந்த தொழிற்சாலையை டாடா குழுமம் வாங்க இருப்பதாக தகவல் வழியாக உள்ளன. 
 
டாடா நிறுவனம் கடந்து சில மாதங்களாக பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகிறது என்பதை தெரிந்ததே. அந்த வகையில் பெங்களூர் அருகே தைவான் நாட்டிற்கு சொந்தமான ஐபோன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வரும் நிலையில் அந்த ஆலையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் இந்திய மதிப்பில் சுமார் 4950 கோடிக்கு டாடா வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மார்ச் 31ஆம் தேதி இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடப்பதாகவும் ஏப்ரல் முதல் இந்நிறுவனம் டாடாவின் கைக்கு வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பத்தாயிரம் ஊழியர்கள் தற்போது பணி செய்து வரும் நிலையில் டாடா நிறுவனம் வாங்கி விட்டால் அந்த ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த ஆலையை டாடா நிறுவனம் வாங்கி விட்டால் இந்தியாவில் அதிக ஐ போன் தயாரிக்கும் நிறுவனமாக டாடா குழுமம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சோலார் திட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி