Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட்டிக்கு வட்டி போடுவதா? கேட்டால் ஒளிந்து கொள்வதா? – விளாசிய நீதிமன்றம்!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (12:06 IST)
கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகள் கடன் வசூலித்தது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கால் மக்கள் பலர் வேலையிழந்ததால் வங்கி கடன் தவணைகளை செலுத்துவதற்கான காலம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் வங்கிகள் ஊரடங்கு மாதங்களிலும் வட்டி செலுத்த சொன்னதாகவும், வட்டி கட்டாதவர்களுக்கு வட்டிக்கு மறு வட்டி போடப்பட்டதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் விரிவான விளக்கத்தை கோரியிருந்தது. இதுகுறித்த பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்கி கடன் விவகாரத்தில் மத்திய அரசு ரிசர்வ் வங்கி பின்னால் ஒளிந்து கொள்வதாக கூறிய உச்சநீதிமன்றம், ”உங்களது கடன் வசூலிக்கும் பணியை செய்ய இது நேரமல்ல.. தேவையான நிவாரணத்தை வழங்குவதும் அவசியம்” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments