Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் கோவில், மசூதி தொடர்பாக வழக்கு தொடர முடியாது: உச்சநீதிமன்றம் தடை..!

Mahendran
வியாழன், 12 டிசம்பர் 2024 (17:34 IST)
கோவில்கள் மற்றும் மசூதிகள் குறித்த வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், இனிமேல் கோவில் மற்றும் மசூதி வழக்கு தொடர தடை என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

 இந்தியாவில் சுதந்திரம் பெற்ற பின்னர் வழிபாட்டு தலங்களை மாற்ற முடியாது என்ற சட்டத்தை எதிர்த்து சுப்ரமணியசாமி உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991 அரசியலமைப்பை எதிர்த்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக விசாரணை நடத்தப்படும்.

இந்த வழக்கு முடியும் வரை, கோவில்கள், மசூதிகள் தொடர்பான எந்த வழக்கும் தொடர முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மதிப்பாய்வின் கீழ் முக்கிய விதிகள் 2,3,4 ஆகிய பிரிவுகள் வழிபாட்டு தலங்களை மாற்றப்படுவதை தடுப்பதற்கான பிரிவுகள் என்றும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் இது தொடர்பான மேலும் வழக்குகள் தொடர முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போது வரை தொடரப்பட்ட வழக்குகளில் முக்கியமான உத்தரவு அல்லது இறுதி உத்தரவு நீதிமன்றங்களால் பிறப்பிக்க கூடாது என்றும், ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது வேறு எந்த நீதிமன்றமும் அதை விசாரிக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments