Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கிகள் இணைப்பு பிரச்சனைகளை உண்டாக்கும் – சுப்ரமண்ய சுவாமி எதிர்ப்பு !

வங்கிகள் இணைப்பு பிரச்சனைகளை உண்டாக்கும் – சுப்ரமண்ய சுவாமி எதிர்ப்பு !
, செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (11:56 IST)
வங்கிகள் இணைப்புக்கு பாஜகவின் மூத்த தலைவரான சுப்ரமண்ய சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை சரிசெய்யும் நோக்கோடு பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைத்துள்ளது மத்திய அரசு. இந்த முடிவுக்கு வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வங்கிகள் இணைப்பு குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமண்ய சுவாமி இன்று கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘பொருளாதாரம் சரியாக இல்லாத நிலையில், வங்கிகள் இணைப்பை அவசரப்பட்டு நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். இது எளிதான காரியம் அல்ல. ஒரே சாலையில் பேங்க் ஆஃப் பரோடாவும் இருக்கும். விஜயா வங்கியும் இருக்கும். நாடு இப்போது இருக்கும் பொருளாதார நிலைமையில் இதை செய்திருக்கக் கூடாது. அருண் ஜேட்லி நிதி அமைச்சராக இருந்தபோது சிறப்பாகச் செயல்படாததன் விளைவை நாம் இப்போது அனுபவிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக்கெட் எடுக்காமல் சென்ற காவலர் – தட்டிக்கேட்ட நடத்துனர் நெஞ்சுவலி வந்து மரணம் !