காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருர் சோனியா காந்தி வயிற்று உபாதைகள் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 9 மணியளவில், சோனியா காந்தி இரைப்பை குடல் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழுவின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஜூன் 9 அன்று சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் இரத்த அழுத்த காரணமாக சில பரிசோதனைகளை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.