Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

Advertiesment
பட்டுக்கோட்டை

Siva

, வெள்ளி, 13 ஜூன் 2025 (14:05 IST)
பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் சிற்றுண்டி சாப்பிட்ட முப்பது மாணவிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதை அடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பட்டுக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்கியிருக்கும் ஆதிதிராவிடர் விடுதியில், இன்று காலை மாணவர்களுக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவிகள் இந்தச் சிற்றுண்டியைச் சாப்பிட்ட நிலையில், சில நிமிடங்களில் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
 
சுமார் 30 மாணவிகளுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மாணவிகளின் உடல்நிலை படிப்படியாகத் தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 
காலை உணவாக சாதம், புளி குழம்பு, உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிட்டதாக மாணவிகள் கூறி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!