Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி காவலாளி கைது!

Advertiesment
பள்ளி காவலாளி

Mahendran

, திங்கள், 28 ஜூலை 2025 (10:08 IST)
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 53 வயது காவலாளி ஒருவர், இரண்டு ஆண் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பள்ளி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாதிக்கப்பட்ட மாணவர்கள் 15 மற்றும் 17 வயதுடையவர்கள் என்றும், அவர்களை பள்ளியின் கேண்டினில் காவலாளி மாறி மாறி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மாணவர்கள் இது குறித்துப் பள்ளி மேலாளரிடம் புகார் அளித்த நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கைது செய்யப்பட்ட காவலாளியால் மேலும் சில மாணவர்கள் பாதிக்கப்பட்டார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.35 லட்சம் மோசடி: வாடகைத் தாய் குழந்தை டிஎன்ஏ பொருந்தவில்லை - மருத்துவர் உட்பட 10 பேர் கைது!