Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுநீரை கண்ணுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்திய பெண்.. வீடியோ வைரலாகி அதிர்ச்சி..!

Advertiesment
புனே

Siva

, வியாழன், 26 ஜூன் 2025 (13:19 IST)
புனேவை சேர்ந்த பெண் ஒருவர், தனது கண்களை சிறுநீரால் கழுவும் விநோதமான கண் பராமரிப்பு முறையை வீடியோவாக பதிவிட்ட நிலையில், சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
இன்ஸ்டாகிராமில் பிரபலமான நூபுர் பிட்டி, தனது கண்களை சிறுநீரால் கழுவி, அதன் நன்மைகளை பட்டியலிடும் ஒரு வீடியோவை பதிவிட்டார். " இயற்கை மருந்தால்  கண் கழுவுதல்  என்ற தலைப்புடன் வெளியான இந்த வீடியோவில், சிறுநீரை பயன்படுத்துவது, கண்களில் ஏற்படும் சிவப்பை போக்கும் என்று அவர் தெரிவித்தார். சிறுநீரை ஒரு கோப்பையில் எடுத்து, கண்களை அதன் மீது வைத்து சிமிட்ட வேண்டும் என்றும், பின்னர் கண்களை அசைத்து, துடைக்காமல் காய விட வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் விளக்கினார்.
 
இந்த வீடியோவை கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  சிறுநீர் என்பது உடலின் கழிவு. அதை மீண்டும் உடலுக்குள் செலுத்துவதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள்?" என்று பலர் கேள்வி எழுப்பினர். 
 
முன்னதாக, நூபுர் பிட்டி 10 நாட்கள் சிறுநீர் விரதம் இருந்ததாகவும், அதன்பின் கண்களை நிறுநீரால் கழுவியதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்.. 15 பயணிகள் ரயில் ரத்து.. தெலுங்கானாவில் பரபரப்பு..!