Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

Advertiesment
மணிப்பூர்

Mahendran

, வியாழன், 4 செப்டம்பர் 2025 (18:41 IST)
மணிப்பூரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த வன்முறை சூழலுக்கு ஒரு முடிவுகட்டும் வகையில், குகி இனக்குழு அமைப்பு, மணிப்பூர் மாநில அரசு மற்றும் இந்திய மத்திய அரசு ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மாநிலத்தின் அமைதியை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.
 
மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாட்டை பேணுவது குறித்து இந்த ஒப்பந்தத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பிரிவினையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, அமைதி பேச்சுவார்த்தைக்கான ஒரு வழிமுறை நிறுவப்படும்.
 
மாநிலத்தில் அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் உடனடியாக திறக்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து மீண்டும் சீரடைந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வன்முறை சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும், அனைத்து சமூகத்தினரிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஒப்பந்தம் மணிப்பூரில் நிரந்தரமான அமைதி திரும்புவதற்கான முதல் படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!