Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு பக்கம் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதம் செய்கிறது: இந்திய எம்பிக்கள் குழு

Advertiesment
பாகிஸ்தான்

Mahendran

, திங்கள், 2 ஜூன் 2025 (11:09 IST)
ஒரு பக்கம் உலக வங்கியிடம் நிதி கேட்டு பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது என்று பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான அனைத்து கட்சி குழு இங்கிலாந்தில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த எம்பிக்கள் குழு இங்கிலாந்து சென்ற நிலையில், அங்கு அவர்கள் கூறியது: பாகிஸ்தான் ஒரு புறம் பிச்சை எடுக்கிறது; மறுபுறம் பயங்கரவாதத்திற்காக பணத்தை செலவு செய்கிறது. பாகிஸ்தானின் காலம் முடிந்துவிட்டது. நமது நண்பர்கள் ஐரோப்பாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல பாகங்களில் இருக்கிறார்கள்.
 
நாங்கள் ஒரு முக்கியமான செய்தியை கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பயங்கரவாதத்தை எப்படி ஒடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு யாருடைய தலையீடும் தேவையில்லை. நீங்கள் எல்லாம் எங்களுடைய தூதுவர்கள். போராட்டத்தை நாங்கள் பார்த்துக்கொள்வோம்; எங்கள் ராணுவம் பார்த்துக்கொள்ளும்.
 
ஆனால், நாம் எல்லோரும் சேர்ந்து சமூக போராட்டம் நடத்த வேண்டும். இனியும் அமைதியாக இருக்கக் கூடாது. “இது என் வேலை இல்லை”, “உன் வேலை இல்லை” என்று ஒதுக்கி வைக்கக் கூடாது. தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும் என்று தெரிவித்தனர்.
 
பாகிஸ்தான் எதிரி நாடாக இருந்தாலும், எங்கள் நாட்டின் நதியின் நீரில் இருந்து 80%  தண்ணீரை அவர்களுக்கு கொடுத்தோம். ஆனால், பதிலுக்கு பயங்கரவாதம், போதைப்பொருள், ஊடுருவல் என தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இனியும் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது,” என்று இந்திய எம்பிக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!