Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உளவாளி ஜோதிக்கும், கேரள முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக பகீர் குற்றச்சாட்டு..!

Advertiesment
பாஜக

Siva

, ஞாயிறு, 1 ஜூன் 2025 (08:50 IST)
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கும், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மருமகனுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூபில் டிராவல் சேனல் நடத்தி வந்த ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் உள்ள லேப்டாப், மொபைல் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பாகிஸ்தானில் உள்ள தூதரக அதிகாரிகள் அவருக்கு உதவி செய்ததாகவும், பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி சீனாவுக்கும் அவர் பயணம் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கேரளாவுக்கு ஜோதி சுற்றுலா பயணமாக வந்த போது, அவருக்கு முழுக்க முழுக்க கேரள மாநில சுற்றுலாத் துறை ஸ்பான்சர் செய்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஜோதியின் கண்ணூர் பயணத்தின் போது, சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ள முதலமைச்சர் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸ் தான் அவருக்கு ஸ்பான்சர் செய்ததாகவும், இருவரும் சந்தித்ததாகவும், அதன் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிலிண்டர் விலை குறைவு என அறிவிப்பு.. ஆனாலும் தாய்மார்கள் அதிருப்தி..!