Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கைக் கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த குழந்தை! ஆந்திராவில் தொடரும் சோகம்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (11:39 IST)
ஆந்திராவில் கொரோனா தொற்று ஏற்பட்ட குழந்தைக்கு சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்துள்ளது.

ஒன்றரை வயது குழந்தை ஜான்விதாவுக்கு ஒருவாரமாக சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தையை கே.ஜி.எச். அரசு மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்ற நிலையில் அங்கு குழந்தைக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைக் கிடைக்கவில்லை. ஏற்கனவே எல்லா படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வெளியிலேயே குழந்தையின் பெற்றோர் இரண்டு மணிநேரமாக காத்திருந்துள்ளனர். ஆனால் படுக்கைக் கிடைக்கும் முன்னதாகவே குழந்தை ஆம்புலன்சிலேயே உயிரிழந்துள்ளது.

இதனால் மருத்துவமனை வாசல் முன்பாகவே குழந்தையின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவமானது சமூகவலைதளங்களில் வெளியாகி அனைவர் மனதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments