Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தனால் கலந்த பெட்ரோலின் விலையை குறைக்க முடியாது: மத்திய அரசு உறுதி..!

Mahendran
வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (11:14 IST)
எத்தனால் கலந்த பெட்ரோலின் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 
 
எத்தனால் கொள்முதல் விலை பெட்ரோலை விட அதிகமாக இருப்பதால், விலையை குறைப்பது சாத்தியமில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் விளக்கத்தின்படி, ஜிஎஸ்டி மற்றும் போக்குவரத்துச் செலவு உட்பட, எத்தனாலின் சராசரி கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.71.50 ஆக உள்ளது. இது, பெட்ரோலின் விலையை விட அதிகம். எனவே, எத்தனாலை கலந்த பிறகு பெட்ரோல் விலையைக் குறைப்பது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த முடிவால், எதிர்காலத்திலும் எத்தனால் கலந்த பெட்ரோலின் விலை குறைய வாய்ப்பே இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது, சுற்றுசூழல் பாதுகாப்பிற்கும், அன்னிய செலாவணியை சேமிப்பதற்கும் ஒரு முக்கிய உத்தியாக பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து

ராஜஸ்தான் மாநிலம் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலுக்குள் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவன் சொல்வது ஏற்புடையது அல்ல.. கம்யூனிஸ்ட் கட்சி சண்முகம் கண்டனம்..!

ஓடும் காரின் கண்ணாடியை உடைத்து கொண்டு பாய்ந்த மான்.. மிஸ் யுனிவர்ஸ் அழகி பரிதாப பலி..!

எம்.எல்.ஏ வீட்டின் முன் திடீரென போராட்டம் நடத்திய ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments