Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீடு புகுந்து இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றிய மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

Advertiesment
ஜார்கண்ட்

Siva

, ஞாயிறு, 27 ஜூலை 2025 (08:42 IST)
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், ஒரு இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நான்கு மர்ம நபர்கள் அவர் மீது பெட்ரோல் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஞ்சியில் உள்ள அந்த இளம்பெண் தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென நான்கு பேர் வீட்டுக்குள் புகுந்து அவர் மீது பெட்ரோலை ஊற்றிவிட்டுத் தப்பி சென்றுள்ளனர். பெட்ரோலை ஊற்றினாலும், அவர்கள் தீ பற்ற வைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
முதலில் இது ஆசிட் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையில், பெட்ரோல் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பெண்ணின் கண்களில் பெட்ரோல் பட்டதால் கருவிழி படலத்தில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
 
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இது ஒரு காதல் விவகாரமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பகிரங்க தாக்குதல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!