Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

Advertiesment
நீதிமன்றம்

Siva

, வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (18:17 IST)
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பெற்றோரை எதிர்த்து தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் எனவே எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் 
ஸ்ரேயா என்பவர் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனு மீதான விசாரணை என்று நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இரு தரப்பு வாதங்களுக்கு பின் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு தர முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
 
மேலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து சமூகத்தை எதிர்கொள்ள பழகிக் கொள்ளுங்கள் என்று நீதிபதி அறிவுரை கூறினார்.
 
 காதலித்து திருமணம் செய்து கொள்ளுபவர்கள் எல்லோரும் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு வந்தால் காவல்துறையினர் மற்ற பணிகளை பார்க்க வேண்டாமா? நீதிபதி அளித்தது சரியான தீர்ப்பு தான் என இந்த தீர்ப்பு குறித்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றன
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!