Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

Advertiesment
மேற்கு வங்கம்

Siva

, வியாழன், 17 ஏப்ரல் 2025 (14:32 IST)
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்து, மேற்கு வங்கத்தில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 7ஆம் தேதி உறுதிப்படுத்தியது. இதில், 25,753 பேரின் நியமனங்கள் செல்லாது எனவும், நியமன செயல்முறை முற்றிலும் களங்கமடைந்தது எனவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், மாணவர்கள் கல்வியில் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக, முறைகேட்டில் தொடர்பு இல்லாத ஆசிரியர்கள், புதிய நியமனங்கள் வரை பணியை தொடரலாம் என சுப்ரீம் கோர்ட் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.
 
ஆனால், இந்த உத்தரவு ஆசிரியர்களுக்கு மட்டும் உண்டு. ஏனெனில், ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இது பொருந்தாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
 
மேலும், மே 31க்குள் புதிய நியமன விளம்பரத்தை வெளியிட்டு, டிசம்பர் 31க்குள் தேர்வு செயல்முறையை முடிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையும் தொடரும் நிலையில், மாநில அரசு மேல்முறையீடு செய்தபோதும், சுப்ரீம் கோர்ட் அதனை நிராகரித்து புதிய நடைமுறைக்கு வழிகாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!