குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் கட்டணத்தில் திடீர் மாற்றம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Siva
ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (10:29 IST)
பொதுமக்களின் அத்தியாவசிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டை, வங்கி சேவைகள், அரசு நலத்திட்டங்கள் உட்பட பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூழலில், 7 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரி தகவல்களை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
 
இதற்கு முன், குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் தரவை புதுப்பிக்க ரூ.125 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
இந்தக் கட்டண விலக்கு அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இந்த முடிவால் சுமார் 6 கோடி குழந்தைகள் பயனடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
குழந்தைகளின் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்குவதே இந்தக் கட்டண விலக்கின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு டிராபிக்கில் பயணம் செய்வதை விட விண்வெளியில் பயணம் செய்வது எளிது: விண்வெளி வீரர் கிண்டல்

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments