நீட் தேர்வு மோசடிகளை புகார் செய்ய புதிய இணையதளம்.. தேசிய தேர்வு முகமை..

Siva
ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (07:51 IST)
நீட் தேர்வு மோசடிகளை தடுக்க புதிய இணையதளத்தை தேசிய தேர்வு முகமை தொடங்கியுள்ளது. இதனை அடுத்து, இந்த தேர்வு குறித்த புகார்களை அதில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என்ற நிலையில், இந்த தேர்வில் கடந்த சில ஆண்டுகளாக அதிக முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து நீதிமன்றத்திலும் சில வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, மோசடி உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க புதிய இணையதள பக்கத்தை தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. neet.nta.ac.in மற்றும்  nta.ac.in ஆகிய இரண்டு  இணையதளங்களின் வழியாக நீட் தேர்வு மோசடி குறித்து புகார் அளிக்கலாம் என்றும், புகார்களை ஆதாரத்துடன் பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும், ’நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்’ என ஆசை காட்டி மோசடிகளில் ஈடுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், மாணவர்கள் உண்மையாகவே படித்து நீட் தேர்வு எழுத வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments