Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி தூக்கில் தொங்க தயாரா? அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (10:32 IST)
அரவக்குறிச்சியின் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கும், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கும் இடையே சண்டை முற்றி வருகிறது.

“நான் சட்டமன்ற உறுப்பினரானால் விஜய பாஸ்கர் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். அவர் பதவி விலக தயாரா? என கேட்டுசொல்லுங்கள்” என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதிமுகவில் இருந்த காலத்திலிருந்தே செந்தில் பாலாஜிக்கும், விஜய பாஸ்கருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் பல இருந்தன. பிறகு டிடிவி தினகரன் கட்சியை பிரித்த போது அமமுகவில் இணைந்தார்.

அப்போது கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பொது கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர் “அமமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினராக திட்டம் போட்டு வருகிறார். அவர் சட்ட மன்ற உறுப்பினர் ஆனால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என பேசினார். அதனால்தான் செந்தில் பாலாஜி இப்படி கேட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று கரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட வந்த விஜய பாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது “அவர் அமமுகவில் இருந்தபடியே சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றால் நான் பதவியை ராஜினாமா செய்வதாக கூறினேன். அவர்தான் திமுகவுக்கு மறுபடியும் கட்சி மாறி பிறகு வெற்றிபெற்றுள்ளார்” என்றார்.

மேலும் “இவ்வளவு பேசும் செந்தில் பாலாஜிதான் ‘டிடிவி தினகரன் முதலமைச்சர் ஆகாவிட்டால் தூக்கில் தொங்குவேன்’ என கூறினார். எப்போது தூக்கில் தொங்க போகிறார் என கேட்டுசொல்லுங்கள்” என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments