Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி தூக்கில் தொங்க தயாரா? அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (10:32 IST)
அரவக்குறிச்சியின் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கும், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கும் இடையே சண்டை முற்றி வருகிறது.

“நான் சட்டமன்ற உறுப்பினரானால் விஜய பாஸ்கர் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். அவர் பதவி விலக தயாரா? என கேட்டுசொல்லுங்கள்” என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதிமுகவில் இருந்த காலத்திலிருந்தே செந்தில் பாலாஜிக்கும், விஜய பாஸ்கருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் பல இருந்தன. பிறகு டிடிவி தினகரன் கட்சியை பிரித்த போது அமமுகவில் இணைந்தார்.

அப்போது கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பொது கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர் “அமமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினராக திட்டம் போட்டு வருகிறார். அவர் சட்ட மன்ற உறுப்பினர் ஆனால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என பேசினார். அதனால்தான் செந்தில் பாலாஜி இப்படி கேட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று கரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட வந்த விஜய பாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது “அவர் அமமுகவில் இருந்தபடியே சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றால் நான் பதவியை ராஜினாமா செய்வதாக கூறினேன். அவர்தான் திமுகவுக்கு மறுபடியும் கட்சி மாறி பிறகு வெற்றிபெற்றுள்ளார்” என்றார்.

மேலும் “இவ்வளவு பேசும் செந்தில் பாலாஜிதான் ‘டிடிவி தினகரன் முதலமைச்சர் ஆகாவிட்டால் தூக்கில் தொங்குவேன்’ என கூறினார். எப்போது தூக்கில் தொங்க போகிறார் என கேட்டுசொல்லுங்கள்” என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments