ஜம்முவில் கவிழ்ந்த பேருந்து: 24 பேர் பலி

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (10:22 IST)
ஜம்மு காஷ்மீர் பகுதியில் பள்ளதாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கிஸ்த்வார் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கேஸ்வன் என்னும் பகுதி. அந்நகரில் பல பயணிகளை ஏற்றிகொண்டு ஒரு மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது.

அப்போது கேஸ்வன் நகருக்கு அருகில் ஒரு குறுகிய சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கவனக்குறைவால் சாலையின் ஒரத்திலிருந்த பள்ளதாக்கில் மினி பேருந்து கவிழ்ந்தது.

அவ்வாறு கவிழ்ந்ததில் அந்த மினி பேருந்தில் பயணித்த 24 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்து, கேஸ்வனுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் பகுதியில் பல பள்ளதாக்கை ஒட்டிய பல குறுகிய சாலைகள் உள்ளதால் இது போன்ற விபத்துகள் அந்த பகுதியில் நடந்துகொண்டே வருகின்றது. இந்நிலையில் தற்போது பள்ளதாக்கில் கவிழ்ந்த மினி பேருந்தில் பயணித்த பயணிகளில் 24 பேர் பலியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பு.. ஆனால் தேஜஸ்வி படம் மட்டும்.. பாஜக கிண்டல்..!

மலேசியா மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்: காங்கிரஸ் விமர்சனம்..!

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எந்த திசை நோக்கி நகரும்?

கூகுள் கண்டுபிடித்த புதிய அல்காரிதம்.. Material Science துறைகளில் புரட்சி.. 13000 மடங்கு அதிவேகம்..!

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்க முடிவு! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

அடுத்த கட்டுரையில்
Show comments