Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தி.மு.க ஒரு ருசி கண்ட பூனை – எச்.ராஜா அதிரடி அட்டாக்

தி.மு.க ஒரு ருசி கண்ட பூனை – எச்.ராஜா அதிரடி அட்டாக்
, சனி, 29 ஜூன் 2019 (16:45 IST)
”திமுக ஒரு ருசி கண்ட பூனை. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு பேசி இனிமேலும் வேஷம் போட முடியாது” என பொறித்து தள்ளியிருக்கிறார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

சிவகங்கையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய எச்.ராஜா “தமிழகம் மக்களவைக்கு பாஜகவிலிருந்து அதிக எம்.பிக்களை கொடுத்திருந்தால் தற்போது 10 அமைச்சர் பதவிகளாவது தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல ஏரிகளை அழித்ததே நீர் தட்டுபாட்டுக்கு காரணம்.

திமுகவினர் தங்கள் பள்ளிகளில் தமிழில் பேசினால் தண்டனை என்று சட்டம் வைத்துக்கொண்டு வெளியே இந்தி எதிர்ப்பை பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள். திமுக ஒரு ருசி கண்ட பூனை. இனிமேலும் திமுக இந்தி எதிர்ப்பு வேஷம் போடுவதை பாஜக அனுமதிக்காது. திமுகவினர் தமிழின துரோகிகள்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு கிலோ மாவுக்கு ...ஒரு கிலோ குடம் தண்ணீர் ஃபிரீ .. சூடு பிடிக்கும் வியாபாரம் !