Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீகார் தேர்தல்: 'இந்தியா' கூட்டணிக்குள் பிளவு; 10 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளை எதிர்த்து போட்டி..!

Advertiesment
இந்தியா கூட்டணி

Siva

, புதன், 22 அக்டோபர் 2025 (08:35 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சுமுகமான உடன்பாடு எட்டப்படாமல் கடுமையான முரண்பாடு நிலவுகிறது. இதன் விளைவாக, கூட்டணிக்குள் உள்ள கட்சிகளே 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.
 
தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதில் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு தயக்கம் இருப்பதும், அதிக இடங்களை கேட்டு நிர்ப்பந்தித்ததும் பிளவுக்கு முக்கிய காரணங்கள். வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரும் 'இந்தியா' கூட்டணி தொகுதி பங்கீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
 
மறுபுறம், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன.
 
இதற்கிடையே, ஜார்க்கண்டில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, பீகாரில் உரிய இடங்கள் ஒதுக்கப்படாததால், 'இந்தியா' கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து, தனித்து போட்டியிட போவதாகவும் எச்சரித்துள்ளது. 
இரண்டாம் கட்ட தேர்தலுக்கான மனுக்களைத் திரும்ப பெற நாளை கடைசி நாள் என்பதால், மோதல் தொகுதிகளின் எண்ணிக்கை அப்போது உறுதியாகும்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் துயர சம்பவ விவகாரம்.. சிபிஐ-க்கு உதவ பெண் ஐ.ஜி உள்பட 2 அதிகாரிகள் நியமனம்.