பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக, காலிஸ்தான் தீவிரவாதி ஒருவர் பஞ்சாப் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல் கொடுத்ததாக, சுகந்திப் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காலிஸ்தான் தீவிரவாதியாக இருப்பவர், உடன் இணைந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடந்த சமயத்தில், இந்திய ராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இவர் சொன்னதாக, ஆதாரப்பூர்வ தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக, ஜோதி என்ற யூடியூபர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.