Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
ஸ்டாலின்

Mahendran

, செவ்வாய், 3 ஜூன் 2025 (12:15 IST)
சென்னை அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளையொட்டி அமைக்கப்பட்ட சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல முக்கிய விவரங்களை பகிர்ந்தார்.
 
“திரு. கருணாநிதியின் பிறந்த நாள் நிகழ்வுகள்  22 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட உள்ளன. அதில், நம் அரசின் சாதனைகளை மக்களிடையே தெளிவாக புரியச் செய்வதற்கான பிரசார நடவடிக்கைகளும் நடைபெறும்," என முதலமைச்சர் கூறினார்.
 
மேலும், மாற்றுத்திறனாளர்களுக்கான உள்ளாட்சி பிரதிநிதித்துவ மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்ததை பற்றி பேசும் போது, “ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம். வேறு ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!