Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா, அப்பா, சகோதரி ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. தாத்தாவுடன் தங்கிய மகன் உயிர் பிழைத்த ஆச்சரியம்..!

Siva
ஞாயிறு, 15 ஜூன் 2025 (14:12 IST)
மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பம், கேதார்நாத்திலிருந்து திரும்பும் வழியில், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. அந்த ஹெலிகாப்டர் குப்த்காசி நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து நடதது. 
 
இந்த விபத்தில் ராஜ்குமார் ஜெயஸ்வால், ஷாரதா ஜெயஸ்வால் தம்பதி, இவர்களது இரண்டு வயது மகள் காஷி ராஜ்குமார் ஜெயஸ்வால் ஆகியோர் பலியானவர்கள். இவர்களின் மகன் விவான், தாத்தாவுடன் தங்கியிருந்ததால் இந்த பயணத்தில் செல்லவில்லை; அதனால் அவன் இந்த துயரத்திலிருந்து உயிர் பிழைத்தான்.
 
விபத்தில் உயிரிழந்த விமானி, கேப்டன் ராஜ்வீர் சிங் சவுகான், இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெய்ப்பூரை சேர்ந்த சவுகான், இந்திய ராணுவத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.
 
உத்தரகாண்டில் உள்ள சார் தாம் வழித்தடத்தில், கடந்த 40 நாட்களில் மட்டும் ஆறு ஹெலிகாப்டர் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இன்று நடந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். காலை 5:10 மணிக்கு குப்த்காசியில் இருந்து புறப்பட்டு, 5:18 மணிக்கு கேதார்நாத் ஹெலிபேடில் தரையிறங்கிய ஹெலிகாப்டர், மீண்டும் 5:19 மணிக்கு கிளம்பி, கவுரிகுண்ட் மற்றும் சோன்பிரயாக் இடையே உள்ள காட்டில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஐந்து பெரியவர்கள், ஒரு குழந்தை மற்றும் விமானி என ஏழு பேர் உயிரிழந்தனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

கமலை குறை சொல்லாதவர்க விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்: ஆளுனர் பேட்டி

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments