Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

Siva
ஞாயிறு, 15 ஜூன் 2025 (13:15 IST)
பாகிஸ்தானின் தேரா புக்டி பகுதியில் உள்ள சூய் நகருக்கு அருகில், பலூச் குடியரசு படை சூயிலிருந்து கராச்சிக்கு செல்லும் 36 அங்குல விட்டம் கொண்ட முக்கிய எரிவாயு குழாய் ஒன்றை தகர்த்துள்ளது. இந்த தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பலுசிஸ்தாபுப் இந்தத் தாக்குதல்,  பாகிஸ்தானின் மின்சார விநியோகத்தை துண்டிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சூய் எரிவாயு களத்திலிருந்து எரிவாயு விநியோகத்தை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
எரிவாயு குழாய் வெடித்ததை தொடர்ந்து, அப்பகுதியில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெரும் தீப்பிழம்புகள் வானுயர எழுவதை காண முடிகிறது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

”எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்!” - மாமனார் வீட்டிற்கு முன்னே டீ கடை வைத்து போராடும் மருமகன்!

ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments