Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2013ல் ஏற்பட்ட கேதார்நாத் வெள்ளம்.. 12 ஆண்டுகளாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத 702 உடல்கள்..!

Mahendran
வியாழன், 19 ஜூன் 2025 (11:08 IST)
கடந்த 2013ஆம் ஆண்டு உத்தரகாண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்த 702 பேரின் உடல்களை, 12 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அடையாளம் காண முடியவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில், 2013ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கோர நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் சிக்கித் தவித்த நிலையில், ராணுவமும் காவல்துறையும் இணைந்து கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேரை காப்பாற்றினட்.
 
பின்னர் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்தப் பெருவெள்ளத்தில் 4,400 பேர் அடித்துச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் 735 உடல் பாகங்கள் மற்றும் மனித எலும்புகள் மீட்கப்பட்டன. ஆனால், 12 ஆண்டுகள் கடந்த பின்னரும், காணாமல் போனவர்களின் உறவினர்களின் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்ட போதிலும், இன்னும் 702 உடல்களை அடையாளம் காண முடியவில்லை என்று கூறப்படுகிறது.
 
12 ஆண்டுகள் ஆகியும் உயிரிழந்த 702 பேர் யார் என இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் நிலையில், அவர்களது உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடிவே இல்லையா? ஒரே நாளில் 3 இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள்: பயணிகள் அச்சம்!

உச்சக்கட்ட பாதுகாப்புடன் ரிலீஸாகிறது ‘தக் லைஃப்’! - கர்நாடக அரசு எடுத்த முடிவு!

ஜிமெயில் Unsubscribe பட்டனை கிளிக் செய்தால் எல்லாம் போச்சு: ஹேக்கர்களின் புதிய தந்திரம் - உஷார்!

ஜப்பானின் முதல் மறுபயன்பாடு ராக்கெட் சோதனை வெற்றி! சாதித்த ஹோண்டா! - விண்வெளி ஆய்வில் புதிய ஆரம்பம்!

ஜூஸ் கடைகளில் ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடை! மீறினால் கடும் நடவடிக்கை! - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments