ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்..!

Siva
புதன், 7 மே 2025 (08:17 IST)
பஹல்காம்  தாக்குதலுக்கு பதிலடியாக, இன்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்துள்ளது. இதில் பல தீவிரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடந்த இந்த தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை அவசரமாக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
 
இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், இந்த தாக்குதல் குறித்த விரிவான விளக்கத்தை இந்திய ராணுவம் அளிக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் ராணுவ தளவாடங்களை குறிவைத்து எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும் மத்திய பாதுகாப்பு துறை விளக்கம் அளித்துள்ளது.
 
இதனை  பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறுவை சிகிச்சை செய்தாலும் படுக்கையில் இருந்து வேலை செய்ய வேண்டும்.. மேனேஜர் அழுத்தத்தால் பெண் அதிர்ச்சி..!

எம்ஜிஆர் பெயரை விஜய் சொல்வது எங்களுக்கு சந்தோசம் தான்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை தீபத் திருவிழா.. பக்தர்கள் பரவசம்..!

22 மாவட்டங்களில் இன்று கனமழை.. நெருங்கி வருகிறதா காற்றழுத்த தாழ்வு மையம்?

பொளந்து கட்டிய கனமழை.. இன்று எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments