Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.. போர் தொடங்கிவிட்டதா?

Advertiesment
இந்திய ராணுவம்

Siva

, புதன், 7 மே 2025 (07:22 IST)
பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியதாகவும், ‘ஆபரேஷன் சிந்துர்’ என்ற பெயரில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ‘ஆபரேஷன் சிந்துர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் இன்று அதிகாலை 1.44 மணிக்கு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் 3 பேர் உயிரிழந்து 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கை தொடர்பாக முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை செய்துள்ளார்.
 
எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்