Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1000 கிமீ உள்ளே வந்து அடிச்சிட்டாங்க.. இந்தியா கூட கூறாத தகவலை கூறிய பாகிஸ்தான்..!

Advertiesment
இந்தியா பாகிஸ்தான் தாக்குதல்

Siva

, புதன், 4 ஜூன் 2025 (09:41 IST)
ஆபரேஷன் சிந்தூர்  தாக்குதலின் போது பாகிஸ்தானில் உள்ள ஒன்பது ராணுவ தளவாடங்களை இந்தியா அழித்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது கூடுதலாக இரண்டு இடங்களை இந்திய ராணுவம் தாக்கியதாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியா–பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் உள்ளே உள்ள பெஷாவர் மற்றும் அட்டோக் ஆகிய இரண்டு பகுதிகளையும் இந்திய படைகள் தாக்கியதாகவும், அதனால் அந்த பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
 
இந்த அறிக்கையில் இந்தியா, பாகிஸ்தானில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு கூறியபோதிலும், அதற்கான எந்த விதமான ஆதாரத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் அதே நேரத்தில், இந்தியா கூட தெரிவிக்காத இந்த இரண்டு இடங்களின் தாக்குதல்களை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளதே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்குள் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு இந்தியா தாக்கிய தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!