Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி: சுயேட்சைகள் ஆதரவு என தகவல்

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (21:04 IST)
ஹரியானா மாநிலத்தில் சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நாளை காலை நடைபெற உள்ள அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் கட்டார் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஹரியானா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போது இன்னும் ஆறு எம்எல்ஏக்கள் பாஜக ஆட்சி அமைக்க தேவைப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க சுயேட்சைகள் முன்வந்துள்ளதால் மீண்டும் ஆட்சி அமைக்க விருப்பதாகவும் முதலமைச்சராக மீண்டும் கட்டார் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன 
 
ஹரியானாவில் மொத்தம் ஏழு சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளதாகவும் 7 பேரும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. முன்னதாக சுயேட்சை எம்.எல்.ஏக்களுடன் பாஜக தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக இதனை அடுத்து பாஜக ஆட்சி அமைவது உறுதி என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments