Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வர் சீட்டில் பங்கு கேட்கும் ஆதித்ய தாக்கரே? – இணங்குமா பாஜக?

முதல்வர் சீட்டில் பங்கு கேட்கும் ஆதித்ய தாக்கரே? – இணங்குமா பாஜக?
, வெள்ளி, 25 அக்டோபர் 2019 (12:26 IST)
மஹாராஷ்டிரத்தில் பாஜக பெருவாரியான தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ள போதும் முதல்வர் பதவியை சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர சட்டசபை தேர்தல் அக்டோபர் 21 அன்று நடந்து முடிந்தது. இதில் மத்தியில் ஆளும் பாஜகவும், சிவசேனா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். பாஜக அடுத்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்தான் என்று கூறிக்கொண்டிருக்க, சிவசேனாவோ பால் தாக்கரேயின் பேரன் ஆதித்ய தாக்கரேதான் அடுத்த முதல்வர் என கூறி வந்தது.

இந்நிலையில் தற்போது இருக்கட்சிகளும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளன. பெரும்பான்மையை விட அதிக வாக்குகள் பெற்றிருப்பதால் பாஜக ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. ஆனால் சிவசேனாவை சேர்ந்தவர்களோ ஏற்கனவே முதல்வர் பதவியை இரு கட்சியும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தே கூட்டணி அமைத்து கொண்டதாகவும் கூறுகின்றனர்.

இந்த சிக்கலை சமாளிக்க பாஜக ஆதித்ய தாக்கரேவுக்கு துணை முதல்வர் பதவியை அளிக்கும் என்றும் பேசிக்கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரபிக்கடலில் “கியார்” புயல்…