சக பெண் ஊழியருடன் கள்ளக்காதல்.. மனைவி, 2 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொலை..!

Siva
வெள்ளி, 21 நவம்பர் 2025 (12:32 IST)
குஜராத் மாநிலம் பவநகரில், உதவி வனப் பாதுகாவலர் சைலேஷ் காம்ப்ளா என்பவர் தனது மனைவி நயனா மற்றும் 13, 9 வயதுள்ள இரு குழந்தைகளையும் கொன்று வீட்டின் அருகே புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காம்ப்ளாவுக்கு ஒரு சக பெண் ஊழியருடன் சுமார் நான்கு ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்தது தெரியவந்துள்ளது.
 
சூரத்திலிருந்து விடுமுறைக்காக பவநகர் வந்திருந்த குடும்பத்தினர் காணாமல் போனதாக காம்ப்ளா நாடகமாடினார். ஆனால், அவரது சந்தேகத்திற்குரிய நடத்தை விசாரணையில் சிக்க வைத்தது.
 
காம்ப்ளா, தனது இளநிலை அதிகாரியிடம் குப்பைகளை கொட்ட சொல்லி இரண்டு குழிகளை தோண்ட வைத்துள்ளார். நவம்பர் 16 அன்று, இந்த குழிகளில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளின் உடல்களை போலீசார் மீட்டனர்.
 
காம்ப்ளா தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு மற்றும் கள்ளக்காதல் காரணமாகவே இந்த கொலையை திட்டமிட்டதாகவும், கொலையை மறைக்க மனைவி வீட்டை விட்டு சென்றதாகக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் ஒப்புக்கொண்டார். பலியானவர்கள் தலையணையால் அமுக்கி கொல்லப்பட்டனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வு தேதி என்ன?

ஜோதிமணி எம்பி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...

அட இதுக்கே நாக்கு தள்ளுதப்பா? திரையுலகிலும் தேர்தலை சந்திக்கும் விஜய்..

ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய நிறுவனத்திற்கு தடை: அமெரிக்கா அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments