Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாயுடன் நண்பன் கள்ளத்தொடர்பு.. மகன் செய்த விபரீத செயலால் அதிர்ச்சி.!

Advertiesment
போபால்

Siva

, ஞாயிறு, 19 அக்டோபர் 2025 (07:23 IST)
மத்தியப் பிரதேசத்தின் போபாலில், தனது தாயுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டதால், நண்பனை இளைஞன் ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று காலை ஷியாம் நகர் மல்டியில் ஆஷிஷ் என்ற 25 வயது நபரின் சடலத்தை காவல்துறை மீட்டது. அவரது கழுத்து அறுக்கப்பட்டு, தலையில் கல்லால் தாக்கப்பட்டிருந்தது.
 
முக்கிய குற்றவாளியான ரஞ்சித், உயிரிழந்த ஆஷிஷ் தனது தாயுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்துள்ளார். தன் வீட்டிற்கு அருகில் வரக்கூடாது என்று ரஞ்சித் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் ஆஷிஷ் மீண்டும் சந்தித்ததாக தெரிகிறது.
 
இந்த நிலையில் ரஞ்சித், தனது நண்பர்களான நிகில் மற்றும் வினய் ஆகியோருடன் சேர்ந்து ஆஷிஷை தாக்கியுள்ளார். கழுத்தை அறுத்து, தலையில் கல்லால் தாக்கியதில் ஆஷிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
சந்தேகம் வருவதற்கு முன் ரஞ்சித்தும் ஆஷிஷும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது சோகமான முரண்பாடு. இந்த கொலை தொடர்பாக மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனாதனிகளுடன் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம்: மக்களுக்கு சித்தராமையா வேண்டுகோள்..!