Publish Date: Fri, 10 Jun 2022 (17:51 IST)
Updated Date: Fri, 10 Jun 2022 (17:58 IST)
டெல்லியில் உள்ள ஷாஜகான் சாலையில், உள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கட்டிடத்தின் 4 வது மாடியில் இன்று திடீரென்று தீப் பிடித்தது.
டெல்லி ஷாஜகான் சாலையில் உள்ள மத்திய பணியாளர் தேர்வாணையம் கட்டிடத்தில் 4 வது மாடியில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயைக் கட்டுக்குள் கொன்டு வந்தனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.