Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (15:46 IST)
ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கியபோது,  ராஜஸ்தான் ஊழல் தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அமாலாக்கத்துறையினர் லஞ்சம் வாங்கும் போது ராஜஸ்தான் ஊழல் தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக ED எனப்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அதன்பிறகு, எம்பி., ஜெகத்ரட்சகன் வீடு அலுவலங்களில் சோதனை செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதேபோல் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அமலாக்கத்துறை அதிரடி காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, மாநில ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்படு வருகிறது.

மேலும், சீட்டு கம்பெனி மோசடி வ்அழக்கில் சொத்துக்களை முடக்காமல் இருக்க இருவரும் ரூ.15 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments