Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன CRPF அதிகாரி கைது.. இன்னும் எத்தனை துரோகிகள்?

Advertiesment
Arrest

Siva

, திங்கள், 26 மே 2025 (14:25 IST)
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது CRPF வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாகிஸ்தானுக்கு ரகசியங்களை பகிர்ந்ததாக யூடியூபர் ஜோதி உட்பட சிலர் சமீப காலமாக கைது செய்யப்பட்டனர். "ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, இந்தியாவில் உள்ள உளவு சொல்லும் துரோகிகளை பிடிக்கும் நடவடிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொருவராக மாட்டி வருகின்றனர்.
 
அந்த வகையில், தற்போது CRPF வீரர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய வம்சாவளியினர் மூலம் நிதி பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், அவர் உளவு சொன்னதும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இது போன்ற தகவல்கள் தினசரி வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இன்னும் எத்தனை துரோகிகள் தான் இந்தியாவில் உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானில் ஏகே 47 துப்பாக்கியுடன் 6 பேர் ஜோதிக்கு பாதுகாப்பு.. நேரில் பார்த்த யூடியூபர் அதிர்ச்சி தகவல்..!