திருப்பதியில் கனமழை.. மழையிலும் குவிந்த பக்தர் வெள்ளம்! மழையில் நனைந்தபடி தரிசனம்..!

Mahendran
புதன், 22 அக்டோபர் 2025 (11:28 IST)
தீபாவளியை ஒட்டி வந்த தொடர் விடுமுறை காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
 
தற்போது வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதியில் பலத்த மழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்று வீசியபோதும், பக்தர்கள், குறிப்பாக குழந்தைகளும் முதியவர்களும், மழையில் நனைந்தபடி நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், தங்குவதற்கு விடுதி கிடைக்காமல் பலரும் அவதிக்குள்ளாகினர்.
 
இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள், சுமார் 15 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கனமழை மற்றும் குளிர்ச்சியான வானிலையும் பக்தர்களின் ஆன்மீக ஆர்வத்தை தடுக்கவில்லை.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments