கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகளுக்கு ஆசைப்பட்டு ரூ.11.95 லட்சம் ஏமாந்த பெண்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

Mahendran
வியாழன், 6 நவம்பர் 2025 (14:26 IST)
டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர், கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகளை பயன்படுத்த உதவுவதாக கூறிய இணைய மோசடி கும்பலின் வலையில் விழுந்து, ரூ. 11.95 லட்சத்தை இழந்தார்.
 
பிரபல நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாக தொலைபேசியில் அழைத்த மோசடிக்காரர்கள், அந்த பெண்ணின் ரிவார்டு புள்ளிகளை பணமாக மாற்ற உதவுவதாக நம்ப வைத்தனர். இதற்காக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபி-யை அவர் அவர்களிடம் பகிர்ந்துள்ளார். ஓடிபி-யை பெற்ற சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ. 11.95 லட்சம் திருடப்பட்டது.
 
உடனடியாகப் புகார் அளித்ததன்பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மோசடி பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
 
வங்கி அதிகாரிகளை போல ஆள்மாறாட்டம் செய்து நடைபெறும் இத்தகைய மோசடிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments