Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

81 ஆயிரத்தை தாண்டியது கொரோனா! – தமிழக இரண்டாம் இடம்!

81 ஆயிரத்தை தாண்டியது கொரோனா! – தமிழக இரண்டாம் இடம்!
, வெள்ளி, 15 மே 2020 (09:19 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்ட ஊரடங்கும் முடிவடைய உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 81 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81,970 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 27,920 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 27,524 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1019 பேர் பலியான நிலையில் 6,059 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 9,674 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 9,591 பேரும், டெல்லியில் 8,470 பேரும், ராஜஸ்தானில் 4,534 பேரும், மத்திய பிரதேசத்தில் 4,426 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் எங்கெங்கு பேருந்துகள் செயல்படும்? விதிமுறைகள் என்ன?