Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 31 லட்சத்தை கடந்தது கொரோனா; குணமடைவோர் அதிகரிப்பு!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (09:40 IST)
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா புதிய பாதிப்புகள் 61 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 31 லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த பல மாதங்களாக இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் கடந்த மாதம் ஜூலை முடிவில் மத்திய அரசு ஊரடங்கை ரத்து செய்தது. அதை தொடர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 61 ஆயிரத்திற்கும் அதிகாமான பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 31,06,348 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57,542 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 23,38,035 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 7,10,771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா இறப்பு விகிதம் 1.82% ஆகவும், குணமடைவோர் விகிதம் 77% ஆகவும் உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments