Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதிப்பை விட குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு: இன்றைய கொரோனா நிலவரம்

பாதிப்பை விட குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு: இன்றைய கொரோனா நிலவரம்
, ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (18:24 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 5975 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 379,385 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5975 பேர்களில் 1298 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 97 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 6517 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 6047 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இன்று பாதிப்பு எண்ணிக்கை விட குணமானோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 319,327 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 68,111 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,63,624 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆயுஷ் அமைச்சக செயலாளராக தமிழரை நியமனம் செய்யுங்கள்: மூத்த காங்கிரஸ் தலைவர்