Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா ஒரு மினி பாகிஸ்தான்.. ராகுலுக்கு தீவிரவாதிகள் வாக்களித்ததாக பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு..

Siva
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (12:44 IST)
கேரளா ஒரு மினி பாகிஸ்தான் என்றும், அதனால் தான் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய தீவிரவாதிகளுக்கு ஓட்டு போட்டுள்ளனர் என்றும் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நிதிஷ் ராணா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் பாஜகவை சேர்ந்த நிதீஷ் ராணா, முதன்முறையாக அமைச்சராக இருப்பவர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.    கேரளா ஒரு மினி பாகிஸ்தான் ஆக மாறிவிட்டது என்று தெரிவித்தார். அதனால் தான், ராகுல் காந்திக்கும், அவரது சகோதரி பிரியங்கா காந்திக்கும், அங்குள்ள தீவிரவாதிகள் ஓட்டு போட்டுள்ளனர் என்றும் கூறினார். 
 
"நான் உண்மையைத்தான் சொல்கிறேன், தீவிரவாதிகளின் ஆதரவால் தான் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் எம்பி ஆகியுள்ளனர்," என்று அவர் கூறியுள்ளார்.
 
அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறைக்கைதியுடன் மசாஜ் சென்டர் சென்ற காவலர்கள்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

இன்று முதல் அமல்படுத்தப்படும் யு.பி.ஐ., புதிய விதிகள்.. பண பரிவர்த்தனை செய்ய என்னென்ன கட்டுப்பாடு?

Union Budget 2025-26 Live: மத்திய பட்ஜெட் 2025-26 நேரலை!

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments