Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

Advertiesment
சிபிஎஸ்இ

Mahendran

, வெள்ளி, 12 டிசம்பர் 2025 (17:35 IST)
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2026ஆம் ஆண்டு முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பல முக்கிய மாற்றங்களை செய்துள்ளது.
 
2026 முதல் சிபிஎஸ்இ ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வுகளை நடத்தும். பிப்ரவரியில் நடக்கும் முதன்மை தேர்வுக்குப் பிறகு, தேவைப்படுவோர் மே மாதத்தில் மூன்று பாடங்களை மட்டும் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண்களை உறுதி செய்யலாம்.
 
வினாத்தாளில் 50% திறனறி கேள்விகள் 20% அப்ஜெக்டிவ் கேள்விகள் மற்றும் 30% சிறு/பெரிய பதிலளிக்கும் கேள்விகள் இடம்பெறும்.  மேலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 75% வருகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
2026 முதல் 9 புள்ளிகளைக் கொண்ட புதிய மதிப்பிடும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..