Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

Advertiesment
சிபிஎஸ்இ

Siva

, செவ்வாய், 22 ஜூலை 2025 (08:25 IST)
அனைத்து சிபிஎஸ்இ  பள்ளிகளிலும் சிசிடிவி  கேமராக்கள் பொருத்துவது கட்டாயம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரிய அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து சிபிஎஸ்இ செயலாளர் கூறுகையில், "மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பள்ளிகளின் முதல் பணியாகும். மாணவர்களின் பாதுகாப்பு இரண்டு அம்சங்களின் கீழ் உறுதி செய்யப்பட வேண்டும். ஒன்று, சமூக விரோத சக்திகளிடமிருந்து மாணவர்களை பாதுகாப்பது. இரண்டாவது, கேலி கிண்டல் போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது" என்று தெரிவித்துள்ளார்.
 
தொழில்நுட்ப உதவியுடன் பள்ளிகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், பள்ளி வளாகத்தில் சிசிடிவி பொருத்துவதை கட்டாயமாக்கி பள்ளி நிர்வாக விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
பள்ளியில் உள்ள முக்கிய பகுதிகளான நுழைவு வாயில்கள், வெளியேறும் பகுதிகள், படிக்கட்டுகள், வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சிசிடிவி காட்சிகளை குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த உத்தரவு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிபிஎஸ்இ வாரியம் எடுக்க போகும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைடிஷ் சரியாக வழங்கவில்லை என தகராறு.. பார் ஊழியர் குத்தி கொலை..!