Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மணப்பெண் தற்கொலை

விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மணப்பெண் தற்கொலை
, செவ்வாய், 13 டிசம்பர் 2022 (17:51 IST)
விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம்  நவிபேட்டை என்ற அகுதியில் வசிப்ப்வர் ரவளி(22). இவருக்கும் அதீ பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இருகுடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்க முடிவு செய்தனர்,

இதற்காக   நேற்று முன் தினம் மெகந்தி நிகழ்ச்சி நடந்தது. அதில், இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும் கலந்து கொண்டனர்.

விடிந்தால் கல்யாணம் என்ற  நிலையில், எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போது, மாப்பிள்ளை சந்தோஷ், மணப்பெண் ரவளிடம் திருமணம் முடிந்தும் வேலைக்குச் செல்ல வேண்டும் என கூறியதாகவும், கல்யாணாத்திற்குப் பின் சொத்துகளை பிரித்து வாங்கி வரவேண்டும் எனக் கூறியதாகத்  தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தெரிகிறது.

இந்த நிலையில்,  இரவில் தன் அறையில் மணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, பெற்றோர் மணமகன் வீட்டார் மீது புகார் கொடுத்துள்ளனர்.

தற்போது ரவளியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு