Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பைக் மீது லாரி ஏறி விபத்து... 2 பேர் உயிரிழப்பு

accident
, திங்கள், 12 செப்டம்பர் 2022 (16:54 IST)
தெலுங்கானா மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது வேகமான வந்து பைக் மோதிய விபத்தில் கை ஓட்டி வந்தவர் மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மா நிலத்தில் மேட்சல் என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த  ஒருவர் மீது வேகமாக வந்த பைக் மோதியது.

இதையடுத்து பைக் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது.  அப்போது, அந்த வழியே இரும்புக் கம்பிகளை ஏற்றி வந்து கொண்டிருந்த ஒரு  லாரி கீழே விழுந்து கிடந்த பைக் மீது ஏறியது.

இந்த விபத்தில் பைக்கில் இருந்தவரும் அவர் ஏற்கனவே மோதிய நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்த விபத்திற்கான காரணம் பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாகன விபத்து இந்தியாவில் அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறிதான்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி