Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

Mahendran
சனி, 5 ஜூலை 2025 (09:59 IST)
பீகார் மாநிலத்தின் பிரபல தொழிலதிபரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவருமான கோபால் கேம்கா, நேற்று இரவு பாட்னாவில் உள்ள தனது வீட்டின் வெளியே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்றிரவு கேம்கா, தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத குற்றவாளிகள் அவரை சுட்டுவிட்டு, தப்பிச் சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேம்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்து ஒரு தோட்டா மற்றும் அதன் வெற்று உறை கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்" என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
சுட்டுக்கொல்லப்பட்ட  கேம்கா மகன் குஞ்சன் கேம்கா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பதும், தந்தையும் மகனும் ஒரே விதமான கொடூரமான முடிவை சந்தித்திருக்கிறார்கள் என்ற தகவல் அனைவரையும் உலுக்கியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments